குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

மாணவர்களுக்காக தினமும் ஒவ்வொரு தொகுதி பழமொழிகள் தருகின்றோம். இன்றைய நாளில் 'இ' மற்றும் 'ஈ' எழுத்தில்

தொடங்கும் பழமொழிகள் உங்களுக்காக..21.12.2016

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

இஞ்சி இலாபம் மஞ்சளில்.

இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.

இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.

இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.

இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.

இடுக்கண் வருங்கால் நகுக.

இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

இரக்கப் போனாலும் சிறக்கப் போ.

இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.

இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை

இராச திசையில் கெட்டவனுமில்லை

இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.

இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.

இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.

இருவர் நட்பு ஒருவர் பொறை.

இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.

இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?

இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.

இளங்கன்று பயமறியாது

இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.

இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.

இறங்கு பொழுதில் மருந்து குடி

இறுகினால் களி , இளகினால் கூழ்.

இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.

இறைத்த கிணறு ஊறும், இறையாத கேணி நாறும்.

இனம் இனத்தைச் சேரும்.

இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே

இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.

இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.

ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.

ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.

ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

ஈர நாவிற்கு எலும்பில்லை.