குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க பகுதி - 7

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.

பொருள்:-அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளை விட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.

 

பொருள்:- பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.

 

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

 

தம்தம் வினையான் வரும்.

 

பொருள்:- தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.

 

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

 

சிறுகை அளாவிய கூழ்.

 

பொருள்:- சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது.

 

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்

 

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

 

advertisement

 

 

பொருள்:- தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.

 

குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

 

மழலைச்சொல் கேளா தவர்.

 

பொருள்:-தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.

 

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

 

முந்தி இருப்பச் செயல்.

 

பொருள்:-தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.

 

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

 

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

 

பொருள்:-பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

 

ஈன்ற பொழுதின் பெரிதவக்கும் தன்மகனைச்

 

சான்றோன் எனக்கேட்ட தாய்.

 

பொருள்:-நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.

 

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

 

என்நோற்றான் கொல்எனும் சொல்.

 

பொருள்:-ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.