உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, சளி தொந்தரவு அதிகரித்ததன்
காரணமாகவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டிசம்பர் 1-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி, கடந்த 7-ம் தேதி உடல் நலம் தேறியதைத் தொடர்ந்து வீடு திரும்பினார். இந்நிலையில் இப்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.