தாமதமான இந்த முடிவுக்கு அந்த கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் ஒருசிலர் தடையாக இருந்ததாகவும்.மேலும் கட்சி வளராமல் போனது அவர்களாலும் என்று தி.மு.க நிர்வாகிகள் சொல்கிறார்கள்.தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு முதுமை காரணமாக அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்படுவதாலும் அக்கட்சி பொதுச்செயலர் அன்பழகனும் முதுமை காரணமாக வேகமாக செயல்படாத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தொண்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
செயல்தலைவராக சுடாலின் ?
வரும் 20 -ம் தேதி தி.மு.க பொதுக்குழுகூட்டம் தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடவுள்ளது.இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் சுடாலினை செயல் தலைவராக அறிவிக்கப்போவதாகவும் சொல்லப்படுகிறது.மேலும் துரைமுருகன்,எ.வ.வேலு,திண்டுக்கல் ஐ.பெரியசாமி ஆகியோருக்கான பொறுப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.செயல்தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டால் தி.மு.க-வில் இளம் ரத்தங்களின் புத்துணர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பேசி வருகிறார்கள்
தாங்க வேண்டிய தடந்தோல் தளபதி - துரைமுருகன்
சுடாலின் செயல்தலைவராக அறிவிக்கப்படலாம் என்று தற்போது பேசபட்டு வரும் நிலையில் கடந்த மாதம் அறிவாலயத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி நுற்றாண்டுவிழாவின் நிறைவு விழா மேடையில் அதனை உறுதிபடுத்தும் விதமாக பேசினார் தி.மு.க-வின் முதன்மை செயலாளர் துரைமுருகன் "இந்த இயக்கம் தொடங்கி 100 ஆண்டு காலம் ஆகிறது. அதில் 50 ஆண்டுகளுக்கு மேல் இயக்கத்தை நடத்தியவர் கலைஞர் அவர்கள்.ஆனால் இன்னும் 50 ஆண்டு காலம் அல்ல.போகிற போக்கை பார்த்தால் அதாவது மெத்தனத்தை பார்த்தால் 100 ஆண்டு காலத்திற்கு இந்த இயக்கம் தேவைப்படுகிறது.இந்த நூறு ஆண்டு காலத்தில் சுமார் 70 ஆண்டு காலமாவது தாங்க வேண்டிய தடந்தோல் தளபதி அவர்களே..எனவே உன்னை விட்டால் எங்களுக்கு வேறு ஆள் இல்லையப்பா "என்றார் துரைமுருகன் .
இது தொடர்பாக துரைமுருகனை தொடர்பு கொண்டு பேசினோம்.பொதுக்குழுவில் விவாதிப்பது குறித்தெல்லாம் பேச முடியாது.அதே நேரத்தில் யூகத்திற்கு எல்லாம் என்னால் பதில் சொல்லமுடியாது என்று கூறினார்.
அரசியல் வாழ்வில் கால்நுற்றாண்டை கடந்த விட்ட சுடாலின் இந்த பதவிக்கு பொருத்தமானவர் என்று தி.மு.க தொண்டர்கள் பேசிவந்த நிலையில் தற்போது அதற்கு அங்கீகாரம்அளிக்கும் வகையில் மூத்த தலைவர்களும் பேசி வருவது "ஸ்டாலின் செயல்தலைவர் "என்ற உறுதியை காட்டுவதாகவே தோன்றுகிறது.