தமிழக முதல்வராக கடந்த 6-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், நாளை அவரது தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதனால், இந்த அமைச்சரவைக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாளை காலை 11.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த யெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். இதையடுத்து, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.
இதனையடுத்து, அதிமுகவை வழி நடத்தப் போவது யார் என்பதை முடிவு செய்யும் விதமாக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வியாழக்கிழமை போயசு தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.