குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஆரம்பித்தது அதிமுக அதகளம்… அமைச்சர் பதவி கேட்டு செங்கோட்டையன் போர்க்கொடி?

09.12.2016-தமக்கு கணிசமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் அமைச்சர் பதவி கேட்டு முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் போர்க்கொடி தூக்குவதாக தகவல்கள் வருகின்றன.

யெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் மிகப் பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது என்பது நிதர்சன உண்மை. அக்கட்சியை முன்னெடுத்துச் செல்லக் கூடிய 2-ம் கட்ட தலைவர்கள் கால்நூற்றாண்டு காலமாகவே இல்லை.இதை அரசியல் பார்வையாளர்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் உள்ளனர். தற்போது 2-ம் கட்ட தலைவர்கள் இல்லாத விவகாரம் அக்கட்சியை ஆட்டம் காண வைக்கத் தொடங்கியுள்ளது.

யெயலலிதா உயிருடன் இருந்தபோது செயல் பலம் மிக்க பலரும் ‘எங்கே வளர்ந்துவிடுவார்களோ? தங்களை மீறிவிடுவார்களோ? யெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களாகிவிடுவார்களோ? என்ற சசிகலா தரப்பின் அச்சம் காரணமாக ஒதுக்கி ஒன்றும் இல்லாமல் செய்யப்பட்டனர். அப்படி ஓரம்கட்டப்பட்டவர்களில் செங்கோட்டையனும் ஒருவர்.

ஒவ்வொரு முறை அமைச்சரவை மாற்றத்தின் போது செங்கோட்டையன் அமைச்சராவார் என்று பேச்சு அடிபடும். ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பமே அவருக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதில் சசிகலா தரப்பு கவனமாக இருந்தது.

தற்போது  யெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலாஇ ஓபிஎஸ் அணி வெளியே தெரிந்தாலும்கள் அதிமுக பல அணிகளாக பிரியத் தொடங்கி உள்ளது. இதன் வெளிப்பாடாகத்தான் செங்கோட்டையன் தமக்கு அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியிருக்கிறார் என்ற செய்தியாகும்.

 

கணிசமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தமக்கு இருப்பதால் தம்மை அமைச்சராக்க வேண்டும் என்று முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு அவர் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. அப்படி அமைச்சர் பதவி கிடைக்காதபட்சத்தில் என்ன நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் செங்கோட்டையன் தரப்பு ஆலோசித்து வருகிறதாம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.