1281. |
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. |
1282. |
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின். |
1283. |
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண். |
1284. |
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு. |
1285. |
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து. |
1286. |
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை. |
1287. |
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து. |
1288. |
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு. |
1289. |
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார். |
1290. |
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று. |