குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஏழைதாசனின் ஏட்டிலிருந்து ஈழத்தமிழர் எழுச்சிப் பாக்கள் குமரியின் பழையவெளியீடுகள்.

 1.அய்.நா.வில் வினா எழுப்புவான்
  எதிர்காலத்தில்
  ஈழத் தமிழன்!  வைகை ஆறுமுகம் - திருப்பூர்-தொகுப்பு முல்லை மைந்தன். அயந்  2. முற்றும் அழிவதில்லை
    மறுநாள் உதிக்கும்
    எழுச்சிச் கதிரவன்.
  
    குமாரி.தே.இரம்யா


3.காற்றின் திசை மாறினாலும்
  மேல் நோக்கியே எரியும்
  விடுதலைத் - தீ

 

4.உலகெங்கும்
  விதைக்கப்பட்டிருக்கின்ற
  தமிழ் விதைகள்

  யாதுமானவன் - கீழருங்குணம்

5.சாம்பல் அல்ல
  நீறுபூத்த நெருப்பு
  காலக்காற்றே வீசு!

  வே.ம.தமிழரசு.

6.ஈழத்தமிழரின் தோல்வி
  உலகத் தமிழர் கற்ற பாடம்
  உதயமாகும் ஈழத்தமிழர் உரிமை

  போழூர் - தயாநிதி

7.அப்பாவித் தமிழர் பெயரில்
  அரசியல் விபச்சாரம்
  கொழுக்கும் கருணாக்கள்!
 
  ஏழைதாசன்-அடப்பன்வயல்.புதுக்கோட்டை

8.வதை முகாம்
  வரிசையில் வாடுகிறது
  விருந்தோம்பிய தமிழினம்!

  வே.ம.தமிழரசு

9.பாதுகாப்பு முகாமில்
 இருக்கிறார்கள் தமிழர்கள்
 எந்தப் பாதுகாப்புமின்றி

 வழக்கறிஞர்.இ.தி.நந்தகுமாரன்
 வளசரவாக்கம்.சென்னை-87

10.தாய்ப் பாலுக்கு
   கதறி அழும் குழந்தை
   சடலமாய் ஈழத்தாய்!

 வெ.இராம்குமார் .வேலுார்
 தொடரும்.................
   தொகுப்பு- முல்லைமைந்தன்

  

தொகுக்க

தமிழர் வீழ்ச்சி ஏன்?

நம் குமுகாய வீழ்ச்சிக்குத் காரணங்களாக இருப்பவை யாவை?

1.பொருளியல் தாக்கமும் அதனைத் தேடும் போராட்டத்தில் மன உழைச்சல்.

2.வேலைப்பளு மற்றும் குடும்பச் சிக்கல்கள் காரணியமாக மொழி.இனம்பற்றிச் சிந்திக்காமை.

3.மனக்குழப்பங்கள்..தெளிவான சிந்தனைப் போக்கின்மை.

4.தமிழரிடையே கூட்டுறவு மனப்பான்மை சிதைவினால்.. தன்னலப் போக்கும் நானுணர்வும் மலிந்துவிட்டது.

5.புறத்தாக்கங்கள் அரசியல் கேடுகள் திரைப்படத்தீமையினால் பண்பாட்டுதச் சீர்ழிவுகள்.

6.எல்லாத்துறையிலும் ஒழுங்கற்ற தமிழுணர்வற்ற தலைமைத்துவம் சந்தர்ப்பவாதம்.

7.திட்டமிடாதவாழ்வு வீண்செலவுகள் கட்டொழுங்கு கிடையாது.

8.தொலைக்காட்சி வானொலி காணொளி போன்றவை பரப்பும்.. மூடத்தனங்கள் பண்பாட்டிலன்றி
கலாச்சார உணர்ச்சியில் மிதமிஞ்சிய பற்று.

9.தமிழுக்கு அரசுரிமையில்லாத நிலை அதனால் மொழியைப் புரக்க எண்ணுவதில்லை.

10.பிறமொழிகளின் ஆதிக்கமும் அதன் மீதுதான் மோகம்கொண்டு அலைதல்.

11.அக்கம்பக்கம் நடக்கும்நிகழ்வுகளால் மனச்சீர்ழிவுகள்.

12.பல கடவுள் நம்பிக்கையால் ஏற்பட்டமனவேறுபாடுகள் சகோதரத்துவ அண்ணன் தம்பி
மனப்பான்மைகிடையாது.மதவியல் கோளாறுகள் மனதுகளை வேறுபடுத்தியுள்ளது.

13.இந்தியன் என்ற போலி உணர்வில் தமிழன் நலன் கருதாமை.

14.தாய்மொழி கற்காததால் சிறு அகவை முதல் தளர்ச்சியான மனவியல் கேடுகள் நலிவுகள்.

15.பண்பாடுற்றபெற்றோர்களால் பண்பாடற்றபுல்லறிவு மக்கள் உருவாக்கப்படுதல்.

16.அறிவும் செறிவும் இல்லாது சாதியக் குடும்பங்களாக தமிழர் பிரிந்து கிடப்பது.

17.தமிழியம் காக்க முன்வராது அரசியலோடும் சினிமாவோடும் ஒதுங்கியிருப்பது.

18.தமிழிய வாழ்வுக்குப்புறம்பான வேலைகளில் அமர்ந்து பதவியு உதவியும் பெறத் தம்மை
அடகுவைத்து குமுகாயத்தை மறந்துவிடுவது அல்லது காட்டிக்கொடுப்பது.

19.அஞ்சாமை துணிவுடைமை கொண்டோர் நம் குமுகாயத்தில் மிகக்குறைவு.

20.தமிழர் வரலாறு  படிப்பதில்லை தமிழறம் போற்றும் திருக்குறளைக்கற்பது இல்லை
தமிழிய நூல்களை வாங்கிப்படிப்பதில்லை.

21.தமிழரைத்தமிழர் மதித்து நடப்பதில்லை; சான்றோர் வாய் மொழி போற்றுவதில்லை.

22.கல்வியில்விழிப்பற்ற மனத்தினராக வாழும் குடும்பச்சுழல்.

23.சொதிடத்தை நம்பி தன்னம்பிக்கை இழந்து சோம்பேறிகளாக இருப்பது.

24.மகிடி மாயையில் மிகுதியான மருள்கொண்டு முடத்தனமான வீண் செலவுகளைச் செய்தல்.

25.மொழி இன வரலாற்றுப் பெருமையினை நிலைநிறுத்த நாடமைத்து வாழமுற்படாத அடிமைச்சிந்தை.

26பகுத்தறிவு இல்லாது எல்லாம் தலைவிதியென்று  இருந்துவிடல்.

27. சிலரைத்தவிர பேசுவதையும் எழுதுவதையும் வயிற்றுப் பிழைப்பாக்குதல் துணிவின்றி அடங்கல்.