தமிழக முதல்வர் யெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இவர் விரைவில் பூரண நலமடைந்து வீடு திரும்ப அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வருக்கு தற்போது எழுந்து உட்காருவதற்கு, நடப்பதற்கு பயிற்சி அளிக்கபட்டு வருவதாகவும், இதை கண்ட மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனையடுத்து யெயலலிதாவை விரைவில் தனி வார்டுக்கு மாற்றம் செய்வது குறித்து மருத்துவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.