சுமார் இரண்டு மணி நேரம் கழித்து சுடாலின் புறப்பட்டார். அடுத்த ஒரு மணி நேரம் கழித்து அழகிரியும் புறபட்டார், திமுகவில் அழகிரியை இணைத்துக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை வார்த்தை நடந்தது..!
அப்போது அழகிரி, தளபதி அருகருகே அமர்ந்திருந்தனர்..!இதை ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்..! இதைக் கண்ட கலைஞர் கண்ணீர் வடித்து அழுதாராம்..! இதைதான் எதிர் பார்த்தேன் என்று கூற அழகிரி தளபதி இருவருமே கண்கலங்கினார்களாம்..!
கடந்த இரண்டு முறை அழகிரி கோபாலபுரம் வந்தபோது ஸ்டாலின் இல்லை, ஆனால் இன்றைய சந்திப்பில் அவரும் இருந்திருப்பது திமுகவினருக்கு சற்று பலமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நள்ளிரவு பேங்காக் செல்லும் அழகிரி நான்கு நாட்களில் சென்னை திரும்பியவுடன் திமுகவில் இணைவது குறித்து தெரிய வரும்..! அழகிரி மதுரைக்கு போன் போட்டு தனது நெருங்கிய விசுவாசிகளுக்கு சொல்ல மதுரை கொண்டாட தயாராகிறது…!!