1221. |
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது. |
1222. |
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை. |
1223. |
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும். |
1224. |
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும். |
1225. |
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை. |
1226. |
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன். |
1227. |
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய். |
1228. |
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை. |
1229. |
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. |
1230. |
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர். |