1211. |
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து. |
1212. |
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன். |
1213. |
நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர். |
1214. |
கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு. |
1215. |
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது. |
1216. |
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன். |
1217. |
நனவினால் நல்காக் கொடியார் கனவனால் என்எம்மைப் பீழிப் பது. |
1218. |
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. |
1219. |
நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர்க் காணா தவர். |
1220. |
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர். |