ஈகங்களை கொச்சைப் படுத்த குத்துக்கரணமடிப்போரோடு?
ஏன் இறந்தோம் ஏன் வாழ மறந்தோம் ஏன் நண்பரை மறந்தோம்.
பெற்றவரை மறந்தோம் உடன் பிறந்தவரைப் பிரிந்தோம்
மக்களை நேசித்தோம் மண்ணை நேசித்தோம் எம்மை நேசித்தோர் இந்த ஈகுங்கள்.
பணத்தை நேசித்தனர் பதவிகளை நேசித்தனர் எதிரிகளை நேசித்தனர்.
பண்ணிய கருமங்கள் கருகத் தொடங்கியது. அர்த்தமில்லா அழிவுகள் முழைத்தது.
உலகின் உயர்வான உயிர்கள் மலிவாக மறைந்தன .
பலமானநாம் பலவீனமாகி கொண்டிருந்தொம் ஊடகங்களில் மட்டும் வென்றோம்
உள்ளே தோற்றேவந்தோம் வென்றமாதிரி அப்பப்பதோற்றமே தெரிந்தது
உலகத்தடைகள் பற்றி அக்கறை கொள்ளாது இருந்தோம் வெறுமை கண்டோம்.
உரிமைகளையும் உயிர்களையும் இழப்பதை அறியாது போரிரைச்சலில் உழன்றோம்
அலையுண்டோம் பொல்லாத காலத்தில் முழுத்தமிழ்நிலமும் மூழ்கியது
ஈகங்களை கொச்சைப் படுத்த குத்துக்கரணமடிப்போரோடு?
என்னதான் செய்ய முடியும்
இந்தச்சுழியங்கள எல்லா வற்றிலும் சுழுியங்களை யே தரமுனைகின்றார்கள்.