குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

உடலுறவே இல்லாமல் குழந்தைகளைப் பெறலாம்! Digg Twitter RSS உடலுறவே இல்லாமல் குழந்தைகளைப் பெறலாம்!

20.08.2011-இந்த நூற்றாண்டிலேயே அறிவி யலில் பல அற்புத சாதனைகள் நிகழ்த்தப்பட இருக்கின்றன. மனி தனைக் குளோனிங் முறையில் உரு வாக்கி விடுவார்கள். அதாவது ஒரு மனித உடலிலிருந்து மற்றொரு மனி தனை உருவாக்கிட முடியும். ஆண், பெண் உடலுறவு கொண்டுதான் குழந்தையை உருவாக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உடலுறவு என்பது உடல் சுகத்திற்காகவே தவிர சந்ததி உற்பத்திக்கு அல்ல என்ற நிலை உருவாகி விடும். உடலுறவினால் கிடைக்கும் சுகத்திற்காக அதை விட்டு விடவும் மாட்டார்கள்.

வசதி படைத்தவர்கள் தம்மையே நகல் எடுத்த மாதிரி பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள இயலும். ஜெனடிக் குறை பேதங்கள் இன்றிக் குழந்தை களை உருவாக்கிக் கொள்வார்கள்; தம் உடலில் உள்ள மரபியல் (ஜீன்) குறைகளையும் நீக்கிக் கொள்வார்கள்.

1978-லூயி பிரவுன் என்ற பெண் குழந்தை சோதனைக் குழாயில் கருவுற்று உருவானது முதல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கட்டி லுக்குப் பதிலாகப் புட்டிகளில்தான் கருவுற்று உருவாகியிருக்கிறார்கள்.

1960இல் கருத்தடைச் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது முதல் பெண் களுக்கு உடலுறவு வேறாகவும், பிள்ளைப் பேறு வேறாகவும் பிரிந்துவிட்டது.

சில வகை ஓணான்கள், மீன்கள், மரப்பேன்கள், ரோடிஃபர் என்ற நுண்ணு யிரிகள் உடலுறவு இல்லாமலேயே சந்ததிகளை உருவாக்குகின்றன.

தாவரங்கள் திசு மாற்றம் செய்யப்படு வதைப் போல மனிதனின் மரபணு மாற்றம் மூலம் மனிதனை உருவாக்கும் நிலை வந்து விடும். அப் படிப்பட்ட நிலையில் ஜீன் மருத்துவமும் கலந்து வழுக்கை, நரை, வியாதி, கண் மற்ற உடலுறுப்புக் குறைபாடுகள் எதுவுமில்லாத குழந்தை களை உருவாக்குவது எளிதாகி விடும்.

ஆர்கானிக் என்ஸானஸ் மென்ட் புரோட்டோகால் இப்படி ஒரு விளம்பரம் 2020--_களில் வெளியிடப்படும். கணினி தகவல் தளத்தில் புகுந்து மருத்துவர் ஜென்னிடம் அனுமதி பெற்ற 100 விழுக்காடு குறையற்ற குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள பெண்கள் வரிசையில் நிற்பார்கள்.

இதய நோய், ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, புற்றுநோய், எய்ட்ஸ், ஒவ் வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களி லிருந்து இயற்கையாகவே உடல் எதிர்ப்புடைய ஜீன்களைக் குழந்தைகளின் உடலில் ஏற்றித்தரும் ஒரு வாய்ப்புதான் இந்த ஆர்கானிக் என்ஹேன்ஸ் மென்ட் புராட்டோகால்.

இந்தப் புதிய குழந்தைப் பேறு மருத் துவம், குழந்தையை உருவாக்குவதற்கு அல்ல. ஏற்கெனவே உருவான கருவிற்குள் மேற்கூறிய நோய் எதிர்ப்பு ஜீன்களைச் செலுத்துவதுதான்.

இந்த நூற்றாண்டின் இறுதியிலேயே மனித ஜீனோம் திட்டம் (ஹ்யூமன் ஜீனோம் புராஜெக்ட்) நிறைவேறி விடும். மனிதனின் அனைத்து ஜீன் களும் வரிசைப்படுத்தி பதிவு செய்யப் படும். எல்லா ஜீன்களின் குறைகளும் நீக்கப்படும். இயற்கையிலேயே நோய் எதிர்ப்புடைய மனிதர்களிடமிருந்து ஜீன்கள் சேகரிக்கப்பட்டு குறைவற்ற மிகச் சிறந்த ஜீனோம் உருவாக்கப்படும்.