குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

நாடு விட்டு நாடு வந்து பரிதாபமாக பலியான வாலிபர்கள்: சுவிசில் ஒரு கோர சம்பவம்.

11.01.2016-சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சறுக்கு விளையாட வந்த இத்தாலி நாட்டு வாலிபர்கள் இருவர் எதிர்பாராமல் நேர்ந்த விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சுவிசின் வாலைசு(ஸ்) மாகாணத்தில் உள்ள Maederluecke என்ற பனிமலை பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டு மிக பிரபலம்.

இந்த விளையாட்டில் ஈடுபட இத்தாலி நாட்டை சேர்ந்த 20 மற்றும் 24 வயதான 2 வாலிபர்கள் நேற்று வந்துள்ளனர்.

இவர்களுடன் மற்ற நாட்டை சேர்ந்த மற்றொரு நபரும் வந்துள்ளார். இந்த வேளையில், 3 வாலிபர்களும் காலை 11.30 மணியளவில் உற்சாகமாக பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்பட்டுள்ளனர்.

அப்போது, சுமார் 8,200 அடி உயர்த்திலிருந்து 300 மீற்றர் பரப்பளவு உடைய பனிமலை உடைந்து அதிவேகமாக சிதறியுள்ளது.

இந்த பனிச்சரிவில் 3 நபர்களும் அடித்துக்கொண்டு சென்றுள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர், மோப்ப நாய்கள் மற்றும் ஹெலிகாப்டருடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

எனினும், 2 இத்தாலி வாலிபர்களுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.

3வது நபர் உயிர் பிழைத்திருந்தாலும், அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற தகவலை மீட்பு குழுவினர் வெளியிடவில்லை.

இந்த பனிமலை பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால், விளையாட்டு போட்டிகளில் யாரும் ஈடுப்பட வேண்டாம் என பொலிசார் கடந்த வெள்ளிக்கிழமையே எச்சரிக்கை விடுத்தும் தற்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

2014 மற்றும் 2015ம் ஆண்டில் வாலைஸ் மாகாணத்தில் மட்டும் பனிச்சரிவு விபத்துக்களால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.