குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இலங்கை தயாரிப்புகளை விற்பனை செய்யக் கூடாது வணிகர் சங்கம் அறிவிப்பு:-

10.08. 2011   இலங்கையில் இறுதிப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழகத்தில் பல் வேறு அமைப்புகளும் போராடி வருகின்றன. இது தொடர்பாக பல் வேறு போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில்,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் இலங்கை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என அறிவித்துள்ளார்.

 நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன். ‘’ இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசுக்கு எதிராக நாம் போராடி நமது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். நமது ஈழ மக்களை கொன்று குவித்த சிங்கள ஆட்சியாளர்களை தண்டிக்கவும், கச்சத்தீவை மீட்கவும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிகள். ஈழத் தமிழர் பிரச்சனையில் துணிவுடன் செயல்படும் ஜெயலலிதாவை வணிகர் சங்கங்களின் பேரவை மிகவும் பாராட்டுகிறது. மேலும் தமிழக அரசின் தீமானத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இலங்கை தயாரிப்புப் பொருட்களை புறக்கணிக்கவும், இலங்கையோடு எவ்விதமான வர்த்தக உறவுகளையும் கொள்ள மாட்டோம் என்றும் அறிவிக்கிறோம். இதற்காக முழு மூச்சுடன் வணிகர்களுடன் கலந்து பேசுவோம். தவிரவும் இலங்கையிலிருந்து வரும் எண்ணெய், தேயிலை, ரப்பர் பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று வலியிறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இது நமது தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை இதில் நாம் அனைவருக்குமே பொறுப்பு உள்ளது என்பதை புரிந்து கொள்வோம்”  த. வெள்ளையன் என தெரிவித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.