1101. |
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. |
1102. |
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து. |
1103. |
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. |
1104. |
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள். |
1105. |
வேட் ட பொழுதின் அவையவை போலுமே தோட் டார் கதுப்பினாள் தோள். |
1106. |
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள். |
1107. |
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. |
1108. |
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு. |
1109. |
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன். |
1110. |
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. |